தொடரும் விபத்துகள்-

தொடரும் விபத்துகள்

புதுதில்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ரயில் பயணம் குறித்த ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இந்த விபத்து அமைந்துள்ளது.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே எஸ்.11 பெட்டியில் திடீரென தீப் பிடித்துள்ளது. அதிகாலை நேரத்தில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் தப்பிக்க முடியாமல் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் பலியாகியுள்ளனர். கழிவறை அருகே ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் முழுமையான, நேர்மையான விசார ணை நடத்தப்பட்டால் தான் உண்மை நிலை யை கண்டறிய முடியும். இந்த விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அனைத்து கோட்ட பொது மேலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப் படும் என்றும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில் வேத் துறை அறிவித்துள்ளது. வழக்கம் போல் விபத்து குறித்து ஆராய குழு ஒன்றும் அமைக் கப்பட்டுள்ளது. நிவாரணநிதி அறிவிப்பது, விசாரணைக் குழு அமைப்பது போன்ற அறிவிப்புகள் விபத் துக்கள் நடக்கும்போது நடைபெறும் சடங்கு களாக மாறிவிட்டன.
ஏற்கனவே இத்தகைய கொடூர விபத்துக்கள் நடைபெற்ற போது அமைக் கப்பட்ட விசாரணைக்குழுக்கள் கண்டறிந்த உண்மை என்ன? அந்தக்குழுக்கள் அளித்த பரிந் துரைகள் என்ன? அதனடிப்படையில் மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறை எடுத்த நடவடிக் கைகள் என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது. 2008ம் ஆண்டு ஆந்திராவில் கவுதம் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியில் தீப்பற்றிக் கொண் டதில் 20 பேர் உயிரிழந்தனர். ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற வாக் குறுதி கானல்நீராகவே உள்ளது.உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவன மான இந்திய ரயில்வேயை நம்பி கோடிக் கணக்கான பயணிகள் உள்ளனர். ஆனால் ரயில்வேத்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச் சர்களாக பொறுப்பேற்றபிறகு, இந்தத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் துரிதப் பட்டுள்ளதோடு, பயணிகளின் பாதுகாப்பு முற் றாக புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டுகளில் பயணிகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பது அபாயகரமான அளவில் குறைக்கப்பட்டு வந்து ள்ளது. ரயில்வே பயணிகள் பாதுகாப்புக்கு முன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் விபத் துகளை தவிர்ப்பதற்கு முழு அளவிலான நட வடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர் தலையங்கம் தட் 31.07.12

வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நிதியுதவி

நாகபுரி, ஜூலை 15: கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும்; அந்த நிதியை வேட்பாளர்களின் பிரசாரச் செலுவுகளுக்கு தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
தேர்தலின்போது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்குகின்றன. இதைத் தடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வேலை.
இதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் ஆணையம் பணத்தைப் பெற்று அதனை வேட்பாளர்களின் பிரசாரச் செலவுகளுக்கு (வாகனங்களுக்கு எரிபொருள், ஓட்டுநர், போஸ்டர்) வழங்கினால் பணநாயகமும் தடுக்கப்படும்; கட்சியின் தலைமைக்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார்.
அரசு சாராத்தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ""பணத்தின் ஆளுமையால் ஜனநாயகம் களவாடப்பட்டு விட்டதா?'' எனும் கருத்தரங்கில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
கறுப்புப் பணத்தின் நடமாட்டத்தையும் அச்சுறுத்தலையும் தடுக்க வேண்டுமெனில் தேர்தலில் கண்டிப்பாக சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலுக்குப் பின் விசுவாசத்துக்கு குறை ஏற்படாமல் அரசியல் கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.
ஒருமுறை, தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு செக் (காசோலை) மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்தபோது கட்சியின் முன்னாள் செயலர் சுர்ஜீத் சிங் நேர்மையாக அந்நிறுவனத்திடமே அந்த செக்கைத் திருப்பிக் கொடுத்து புது இலக்கணத்தை உருவாக்
கினார்.
ஹசாரே குறித்து: ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வரும் அண்ணா ஹசாரே குறித்துப் பேசிய அவர், ஹசாரே குழுவினர் அரசியல் கட்சியினர் பணத்தை சேகரிப்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அது எங்கிருந்து (கார்ப்பரேட் நிறுவனங்கள்) வருகிறது என்பது குறித்து குரல் கொடுப்பதில்லை. முதலில் நாம் பணம் வரும் வழியைத்தான் அடைக்க வேண்டும்.
யாருக்கும் 50 சதவீதம் இல்லை: கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த கட்சிகளைப் பார்த்தோமேயானால் எந்தக் கட்சிக்குமே 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி அரசு 42 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. அதுவும் கூட 50 சதவீதத்தைத் தொடவில்லை.
ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி செய்து வருகிறது.
சிறந்த ஜனநாயகம் என்பது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்களாவது நாடாளுமன்றமும் மற்றும் சட்டப் பேரவையும் செயல்பட வேண்டும்.
60 ஆண்டுக்கு முன்னாள் நாம் புதிய குடியரசை அமைத்து, இனிமேல் புதிய வளமான வாழ்க்கையை அமைக்கலாம் என்று தெரிவித்து ஆரம்பித்தோம். ஆனால் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட அந்த வளமான வாழ்வு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார் யெச்சூரி.