13TH INTERNATIONAL MEET OF COMMUNIST & WORKERS' PARTY AT ATHENS



The proceedings of the 13th International Meeting of the Communist and Workers parties were successfully completed which was hosted by the KKE (Communist Party of Greece ) in Athens from the 9th to the 11th of December 2011.
There were over 100 representatives at the meeting of 78 Communist and Workers parties from 59 countries from every continent in the world. Several Communist and Workers parties were not able to attend and sent messages of greetings to the International Meeting.

The participation of the Communist and Workers parties surpassed every precedent. These meetings began in Athens at the initiative of the KKE 13 years ago, where it was held for 7 consecutive years from 1999, and later travelled to every continent of the world to return this year to Athens.

The theme of this years meeting was: Socialism is the Future!The international situation and the experience of the communists 20 years after the counterrevolution in the USSR. The tasks for the development of the class struggle in conditions of capitalist crisis, imperialist wars, of the current popular struggles and uprisings, for working class-popular rights, the strengthening of proletarian internationalism and the anti-imperialist front, for the overthrow of capitalism and the construction of socialism”.

The parties that participated in the meeting discussed the conclusions which are to be drawn 20 years after the counterrevolution in the USSR, they exchanged experiences and assessments concerning the developments and tasks of the communists.

P.RAMA MURTHY- A REVOLUTIONARY LEADER

நல்லிணக்க நாயகர்!



‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண்டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

_____________________

இந்திய விடுதலைப்போராட்ட பேரியக்கத்தின் போது காங்கிரஸ் கட்சி, தவணை முறையில் சலுகை கேட்டு மனு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ‘பூரண விடுதலை’ என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு மாநிலங்களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது, தட்சிணபிரதேசம் போன்ற காரிய சாத்தியமற்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மொழி வழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, தனித்துவம் பாதுகாக்கப்பட மொழி வழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமைய முடியும் என்பது பொதுவுடைமை இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வை.

1952ம் ஆண்டு தேசத்தின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியைக் கொண் டதாக சென்னை ராஜதானி இருந்தது. அந்தத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் அடிப்படையில் தந்தை பெரியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. நியாயமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்த ராஜாஜி கட்சி தாவிகளின் உதவியோடு காங். ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.

சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மலையாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெலுங்கிலும் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாகவே ஆந்திர, கேரள மாநிலங்கள் உருவாகின.

அதன்பின்னரும் கூட சென்னை ராஜதானி என்றேஅழைக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட மறுத்தது. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரடியாக வந்து பி.ராமமூர்த்தி உண்ணா விரதத்தை கைவிடுமாறும், அனைவரும் சேர்ந்து தொடர்ந்து போராடலாம் என்றும் கூறினார்.

‘இன்றைய ஆட்சியில் வாழ்வதை விட நான் சாவதே மேல்’ என்று கூறிவிட்டார் சங்கரலிங்கனார். 77 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவரது மரண சாசனத்தின்படி அவரது உடல் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் இறுதி நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

சென்னை தமிழகத்தோடு தக்கவைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது அவரது வரலாற்றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் கூறும் தகவல்.

1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே நுட்பமான பொருளாதார விஷயங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொருளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார்.

1956ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி என்று பிரகடனப்படுத்தும் சட்டமுன் வடிவை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த பி.ராமமூர்த்தி எழுந்து, இந்நாள் தமிழ் நாட்டின் திருநாள் என்று நெஞ்சம் நெகிழ வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி ஆனால் மட்டும் போதாது. பயிற்று மொழி ஆகவும் வேண்டும் என்றார். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறவில்லை என்பது நெஞ்சில் முள்ளாய் உறுத்தும் நிஜம்.

நெய்வேலியில் அனல் மின்நிலையம் அமைந்ததிலும், திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைந்ததிலும், சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை தமிழக தொழில் வளர்ச்சியின் வரலாறு அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.

மதவெறி சக்திகளால் இன்று முடக்கப் பட்டுள்ள சேதுக்கால்வாய் திட்டம் குறித்து 1967ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி.

1952ம் ஆண்டு பெரியாறு அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யும் புனல்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ராமமூர்த்தியை அழைத்து இது குறித்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2பைசா தருவதென்று பேசி, அதற்கு பட்டம் தாணுப் பிள்ளையை சம்மதிக்கச் செய்தார் பி.ராமமூர்த்தி.

இது குறித்து பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்றும் அனைவரும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்றாகும்.

‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண் டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந்தது. கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக்கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடவேண்டும் என்பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசினார். இரு பெரும் தலைவர்களின் முயற்சியால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதிகளில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசுகளும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசுகளும் செலவினை ஏற்று அணை கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.

ஒன்றாக இருந்த பஞ்சாப் மாநிலம், பஞ்சாப், ஹரியானா என்று பிரிக்கப்பட்ட, பிறகு சண்டிகர் நகர் யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. இருதரப்பிலும் கொந்தளிப்பான சூழ்நிலை. அப்போது அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் துடன் பெரும் பங்காற்றியவர் தோழர் பி.ராம மூர்த்தி.

அசாமில் பிரிவினை கோஷம் எழுந்த போதும் தோழர் பி.ராமமூர்த்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கட்சியின் சார்பில் முன்னின்றார். அவரது சக தோழரும் போராளியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்து வரைந்துள்ள சொற்சித்திரம் இது: ‘நாட்டை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக தேசிய பிரச்சனைகளை பி.ஆர். வெகுவிரைவில் புரிந்துகொள்வார். பஞ்சாப் மாநில சீரமைப்பிலும், அதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அசாம் குறித்து அவர் எழுதிய பிரசுரமானது அச்சமயத்தில் கட்சியின் கண்ணோட்டத்தை விளக்கியது.’

1978ம் ஆண்டு சீமென்ஸ் என்ற ஜெர்மானிய நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை விழுங்க முயற்சி செய்தபோது அதை எதிர்த்து சத்திய ஆவேசத்துடன் போராடியவர் பி.ஆர். அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தனியொரு நூலாகவே வெளிவந்தது. இன்றைக்கு சில்லரை வர்த்தகத்தையும் கூட விழுங்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வாய்பிளந்து வருகின்றன. நடை பாவாடை விரித்து நலுங்கு பாடுகிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

தோழர் பி.ராமமூர்த்தி உயர்த்திப்பிடித்த தேசபக்த, வர்க்க ஒற்றுமை பதாகையை ஏந்தி தேசத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க போராடுவதே அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

- மதுக்கூர் ராமலிங்கம்

ஊகவர்த்தகமும், ஊழலும் இணைபிரியாதவை

ஊகவர்த்தகமும், ஊழலும்  இணைபிரியாதவை   மாநிலங்களவையில் Sitharam yechury in Rajya saba

விலைவாசியைக் குறைத் திட மத்திய அரசு, ஊக வணிகத் தைத் தடை செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திட வேண்டும், உணவுக் கிடங்குகளில் மிகுதியாக உள்ள உணவுதானியங்களை பொது விநியோக முறையில் விநியோ கித்திட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும் மாநிலங்களவை த் தலைவருமான சீத்தாராம் யெச் சூரி கூறினார்.

நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில், முன் னெப்போதும் இல்லாத அள விற்கு உணவு மற்றும் அத்தியா வசியப் பொருள்களின் விலை கள் கடுமையாக உயர்ந்திருப்ப தால், சாமானிய மக்களின் மீது அவற்றின் தாக்கம்’ என்ற பொருளில் குறுகிய கால விவா தம் நடைபெற்றது. அதில் பங் கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசி யதாவது: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங் கும்போது நிதியமைச் சர் பதினொரு பக்கஅறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில் அவர், ‘‘நம் மக்களின் வரு மானத்தில் சீரான வளர்ச்சி, மக்களின் தேவையை அதிகப் படுத்தியிருக்கின்றன. அதுதான் விலைவாசி உயர்வுக்குக் கார ணம்,’ என்று கூறியி ருந்தார். ஆனால், எதார்த்த நிலை என்ன? அரசாங்கம் வெளியிட் டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையே என்ன சொல் கிறது? ‘‘மக்கள் பொருட்களை வாங்குவதற்காக மேற் கொண் டிடும் செலவினம் என்பது 2005-06ஆம்ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, தற் போது 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சியடைந் திருக்கிறது.’’ இதுதான் அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாகும். மக்களின் உண் மையான வருமானம் அதிகரித் திருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். உலகமய ஆதர வாளர்கள் போற்றிப் புகழும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் என்ன கூறுகிறது? ‘‘நாட்டில் அதிகபட்சம் ஊதி யம் பெற்று வந்த 10 விழுக் காட்டினர், அடிமட்டத்தில் உள்ள 10விழுக்காட்டினரை விட 12 மடங்கு அதிகம் பெறு கிறார்கள். இது 60களில் இருந் ததைவிட 6 பங்கு அதிகம்.’’ இவ்வாறு ஒளிரும் இந்தியர் களுக்கும், அவதியுறும் இந்தி யர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்திருக் கிறது. இந்த இடைவெளியைக் குறைத்திட, சாமானிய மக்க ளின் அவல நிலையை ஓரளவா வது போக்கிட, விலைவாசி யைக் குறைத்திட வேண்டும். அதற்கு மூன்று முக்கிய நட வடிக்கைகளை அரசு எடுத் திடவேண்டும் என்றுதான் நாங் கள் கூறுகிறோம். கடந்த இரு ஆண்டுகளில் உணவுப் பொருட் கள் மீதான பணவீக்கம் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. தற்போது அது 12 விழுக்காட்டிற்கும் அதி கமாக இருக்கிறது. நாட்டில் வருமானம் அதிகரித்திருக் கிறதென்றால் அது உயர்மட் டத்தில் உள்ள ஒருசிலரின் கை களுக்குத்தான் சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் வரு மானம் உயரவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வினால் கடு மையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விலைவாசி உயர் வுக்கு முக்கியமான காரணி களில் ஒன்று ஊக வர்த்தகம். இலாபம் இல்லை என்றால் யாரும் ஊக வர்த்தகத்தில் முத லீடு செய்ய மாட்டார்கள். விலைவாசி உயரவில்லை என் றால், ஊக வர்த்தகத்தில் லாபம் ஈட்ட முடியாது. விலைவாசி உயரவில்லை என்றால் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய் துள்ளவர்கள் எவ்வித லாபத் தையும் ஈட்ட முடியாது. எனவே விலைவாசி உயர்வுக்கான நிர்ப் பந்தம் இயல்பாகவே ஊக வர்த் தகத்தில் ஈடுபட்டிருப்பவர்க ளிடமிருந்து வருகிறது. எனவே, விலைவாசியைக் குறைத்திட

முதல் கட்டமாக ஊக வர்த்தகத் தைத் தடை செய்ய வேண்டும். ஊக வர்த்தகமும் ஊழலும் இணைபிரியாதவை.ஊக வர்த் தகத்தை இயக்கிக் கொண்டி ருப்பதே கறுப்புப் பணம்தான்.

அடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு. தற்போது அரசாங்கம் பெட் ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்திருப்ப தாகக் கூறுகிறது. உலகச் சந் தையில் பெட்ரோலின் விலை உயர்வதால்தான் இங்கும் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்று அரசுத்தரப்பில் சொல் லப்படுகிறது. ஆனால் இது

உண்மையல்ல. நம் விலைகள், உலக விலைகளுடன் இணைக் கப்படவில்லை. நம் நாட்டில் உற்பத்தியுடன்தான்விலைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக, உணவு தானிய இருப்பு. இன்றைய தினம் மத் திய அரசின் கிடங்குகளில் 600 லட்சம் டன்களுக்கு மேல் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இது வழக்கமாக இருக்கும் இருப்பைக் காட்டிலும்

இரண்டரை பங்குக்கும் அதிக மாகும். எனவே, இவற்றைப் பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு அளித் திட முன்வரவேண்டும். இது வும் விலைவாசியைக் கட்டுப் படுத்திட உதவும்.இவ்வாறு, ஊக வர்த்தகத்தைத் தடை செய் தல், பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை மீண்டும் குறைத்தல், உபரியாக உள்ள உணவு தானியங்களை பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு வழங்குதல் ஆகிய மூன்றுமுக்கிய நடவடிக் கைகளின் மூலமாகவும் விலை வாசியைக் குறைத்திட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது


பல்பொருள் சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு நாடு முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான சிறுகடை வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை, அரசின் இந்த முடிவு அழித்து நிர்மூலமாக்கும்; சில்லரை விற்பனைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். மிகக்கடுமையான அளவில் நீடிக்கும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவசாய நெருக்கடியின் துயரம் ஆகியவற்றின் பின்னணியில், இந்த முடிவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத மனப்பான்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து செயலாற்ற மத்திய அரசு ஆவலோடு இருக்கிறது என்பதும், தனது சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பதைவிட வால் மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ஃ போர் போன்ற பன்னாட்டு அனகோண்டாக்களுக்கு சேவை செய்யவே ஆவலோடு இருக்கிறது என்பதும் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு நிபந்தனைகள் என்ற பெயரில் அரசு அறிவித்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவையாகவும், எந்த தரப்பு மக்களையும் பாதுகாக்க உகந்தவையாகவும் இல்லை. ரூ.520 கோடி முதலீட்டுத்தகுதி என்பது வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃ போர் போன்ற பகாசுர சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இந்த கம்பெனி கள் பல்லாயிரம் கோடி டாலர் முதலீட்டு சக்தி கொண்டவை. அந்நிய சில்லரை விற்பனை மையங்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசின் கட்டுப்பாடு, எந்தவிதத்திலும் அர்த்தமற்றது. ஏனென்றால், மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் கூடுதல் வருமானம் கொண்ட பிரிவினரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு இது போன்ற மாநகரங்களில் முதலில் கடைவிரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். இத்தகைய பெரும் நகரங்களில்தான் மிக அதிக அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் குவிந்திருக்கிறார்கள்.

உலகிலேயே சில்லரை வியாபாரம் மிக அதிக அளவிலும், மிக விரிவான அளவிலும் நடக்கும் நாடு இந்தியாதான். இங்கு ஆயிரம் நபர்களுக்கு 11 சிறு கடைகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 1.2 கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடைகளில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். இவற்றில் 95 சதவீத கடைகள் தங்களுக்கு தாங்களே சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொண்ட நபர்களால் 500 சதுர அடி பரப்பிற்கும் குறைவான இடத்தில் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் சில்லரை விற்பனை கடைகள் நுழைந்தால், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மிக மிகக்கடுமையான முறையில் தாக்கப்படுவார்கள். எங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தனவோ, அங்கெல்லாம் சிறுகடை வியாபாரிகள் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறு அளவிலான சில்லரை விற்பனைக்கடைகள் என்பவை முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டனர்; இப்போது வரைமுறையின்றி வளர்ந்து நிற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கடுமையான உரிம விதிமுறைகளை இந்நாடுகள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சில்லரை வர்த்தகத்துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவிற்கு, சில்லரை விற்பனை நடவடிக்கைகளுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறி அரசு நியாயப்படுத்துகிறது. (இந்த முதலீடு உணவு மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தல், தயாரிப்புப்பணி, விநியோகம், வடிவமைப்பு மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சேமிப்புக்கிடங்குகள், குளிர்பதன வசதி கொண்ட கட்டமைப்புகள் மற்றும் பேக்கிங் போன்ற துறைகளில் செய்யப்படவேண்டும் என்று அரசு கூறுகிறது.) இந்த நிபந்தனை, நாட்டில் சரக்குகளைக் கையாள இன்னும் கூடுதல் வாய்ப்பு வசதிகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவற்றை உருவாக்க உதவும் என்றும், இது விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் சில்லரை விற்பனை மையங்களால் நடத்தப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், சிறு விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். மாறாக, விவசாயிகளுக்கு மிக மிகக் குறைவான விலையே கிடைக்கப் பெற்றுள்ளது. விளைபொருட்களுக்கு தன்னிச்சையாக தர நிர்ணயம் செய்துகொண்டு, விவசாயிகளின் பொருட்கள் அந்தத் தரத்தை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி விலையை அப்பட்டமாகக் குறைப்பதே அனுபவமாக இருந்திருக்கிறது. பன்னாட்டு பெரும் நிறுவனங்களை விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்பை  கைவிடுவதேயாகும்.  இது நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிகக்கடுமையான பாதகத்தை ஏற்படுத்தும்.

சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள், பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட்டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான நுகர்பொருட்களின் ஒட்டுமொத்த சப்ளை மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டை கொண்டுவரும். உள்நாட்டுச் சந்தைக்குள் அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இப்படி பொருட்கள் வந்து குவிவது, சில்லரை விற்பனையில் பொருட்களின் விலை குறையவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கவும் உதவும் என்று கூறப்படுவது முற்றிலும் மோசடித்தனமானது. ஏகபோக சந்தை அதிகாரமும், பெருமளவிலான பொருட்களை இருப்பு வைக்கும் திறனும் கொண்ட இந்த மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விலைக்குறைப்பில் ஈடுபடாது; மாறாக பொருட்களை பதுக்கி வைத்து, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே முனையும்.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பணத்தைக் கொடுத்து பொருளை பெற்றுச்செல்லும் வர்த்தகத்தில் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன; இதற்காக அரசு அனுமதியும் அளித்துள்ளது. இந்த அனுமதியை பெற்ற நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தொடர்ந்து மீறியே வந்திருக்கின்றன; ஆனால் இதை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல சுயகட்டுப்பாடு என்ற முறையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்த நிபந்தனைகளை அமல்படுத்துவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையை தாராளமாக திறந்துவிட வேண்டுமென்று நீண்ட காலமாகவே மத்திய அரசை பன்னாட்டு பெரும் நிறுவனங்களும் அந்நிய அரசாங்கங்களும் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் இந்த முடிவை மேற்கொள்ளவிடா மல் இடதுசாரி கட்சிகளே தடுத்து நிறுத்தின. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், எந்தவித தடையுமின்றி அந்நிய நிர்ப்பந்தங்களுக்கு அரசு முழுமையாக பணிந்து கொண்டிருக்கிறது.

அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பு மக்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்த்து நிற்கவேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. நம் தேசத்தை, நமது எதிர்காலத்தை காக்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு நிற்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இந்தியா விற்பனக்கல்ல என்று ஆவேசத்தோடு போராடும் தருணம் இது!

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் -எம்.கண்ணன்

  
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப் போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந் திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசுஎப் படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப் படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங் கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை - ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படு கின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடா ளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட் களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத் தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயி ரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசு களுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானி யமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த் தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவா லியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்

(கோடியில்) (கோடியில்) (கோடியில்)

ஐஒசி 5294 .00 832.27 6126.27 எச்பிசிஎல் 2142.22 90.90 2233.12

பிபிசிஎல் 2142.22 198.00 2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமை யிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறு வனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடு களுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறு வனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட் களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் கார ணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்று மதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட் ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக் கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வரு மானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடை யும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழை கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத் திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானி யத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக் கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ்- திமுக அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முத லாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடி யை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரி களில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகை கள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழை களை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர் களை மேலும் பணக்காரர் களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்
நன்றி : தீக்கதிர்   நாளிதழ்

மறைக்கப்படும் உண்மைகள்

                சர்வதேச சந்தையி லிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல்    இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட் ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

                நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கை கள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக் கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறு தலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோ லியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊட கங்களும் தூக்கிப் பிடிக்கின்றன.

                        எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறு வனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிட வில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி ( இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை யாக 49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் - டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலா பம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டி விடாதீர்கள், பிரதமர் அவர்களே.

                      பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம், நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப் பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கை யாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறை யில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங் களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

                      இப்போது மற்றொரு எதார்த்த நிலையை யும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறை யில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலு கைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட் டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட் சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபா யாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத் தால் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அர சாங்கம் ரத்து செய்திருக்கிறது.

             நிதிப் பற்றாக்குறை     என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர் அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டி ருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளா தாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவை யான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக் காது. மாறாக, வேலைவாய்ப்புகளும், அத னைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

                       கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக் கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித் திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம் என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக் குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற் றையும்விட மோசமான அம்சம், விவசாயத் தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச் சியடைந்திருப்பதாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தை குஷிப்படுத் திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள் கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற் காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கை களைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளி லிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி  வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

                           நாட்டு மக்களின் நலன்களைக் காப் பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச் சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங் களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.
நன்றி : தீக்கதிர் நாளிதழ்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

                                       1934  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த  நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று,  பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப்  பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில்,  புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம்  உணரப்பட்டிருக்கிறது.
மாவோ  குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை  தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக்  கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப்  போகிறீர்கள்.


சீனப்  புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி  ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ.  அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா  சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம்  வெளியிட்டுள்ளது.


லீயின்  கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம்.  மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே  விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன்  பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம்  செய்துகொள்கிறார்கள்.
மெய்க்காப்பாளர்  எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள்  குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த  மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது  பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான்  மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட
குதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.
அத்தகைய  எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை  விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட  பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த  அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.


இப்புத்தகத்தை  வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக்  கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை  வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக  அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல்  தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத்  துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில்  ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது;  அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக  ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை.  இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும்  ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம்  புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட  வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில்  அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று  எதிர்த்தார்.


அதற்கு  காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப்  பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ  நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே  நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும்  கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே  அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின்  குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும்.  மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு  அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத்  தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.


அதே  நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம்  நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால்  முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல்  செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட  உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட  முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று  அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம்,  குழுங்கியது, கண்கள் கசிந்தன.


“மாவோ  அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த  இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார்  மெய்க்காப்பாளர்.


ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.
“நாம்  கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.  மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு  நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும்  மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.



எல்லா  சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர்,  தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை  மேற்கொண்டார்.


அதைப்போல,  நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம்  இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்  மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள்  சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய  சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.


-இரா.சிந்தன்


மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம் 

ருஷ்ய புரட்சி

ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்


lenin

வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயமாதல் என்ற பெயரில் உருவான அக-புற நெருக்கடிகள் எளியமனிதர்களை மூச்சுத்திணறச் செய்து ஒடுக்கிவருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தெருவில் இறங்கிப் போராடி வெற்றி பெற்று வருகிறார்கள்.
துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்து எதேச்சதிகார ஆட்சி நடத்திய அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அரசு அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன் றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அடக்கு முறைகளைப் பற்றிய பயமின்றி  கடல் போன்று மக்கள் திரண்டு ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்து புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள்.
எண்ணெய் வளத்திற்காக பல ஆண்டுகாலமாக அமெரிக்கா தன் பிடியில் வைத்திருந்த வெனிசுலாவிலும் இது போன்ற மக்கள் எழுச்சியே அதிபர் சாவேஸ் அரசை உருவாக்கியது. இந்த எல்லா மக்கள் எழுச்சிகளுக்கும் ஒரே அடித்தளம்தான் உள்ளது. அது தான் ருஷ்யப் புரட்சி என்று அழைக்கப்படும் நவம்பர் புரட்சி.
மனிதகுல வரலாற்றில் பெரும் பான்மை நாடுகள் போரின் வழியாக கைப்பற்றப்பட்டு அடிமையாக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான மனிதர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நாட்டின்  பூர்வீக குடிமக்கள் இரண்டாம் பட்ச பிரஜைகளாக நடத்தப்படுவார்கள். அந்த நிலையை மாற்றி ஒரு தேசத்தின் அரசியல் மாற்றத்தை மக்களே முன்நின்று நடத்தியது ருஷ்ய புரட்சியில் தான் நடந்தேறியது.
ஜாரின் அதிகார ஒடுக்குமுறைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் ஒன்று திரண்டு நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பொதுவுடைமை ஆட்சியை உருவாக்கிக் காட்டியதே ருஷ்யபுரட்சியின் அளப்பரிய சாதனை.
அது தற்செயலாக உருவான ஒன் றில்லை, உருவாக்கப்பட்டது. அதன் பின்னே மார்க்ஸின் சிந்தனைகளும் லெனினின் வழிகாட்டுதலும் களப்பணியாளர்களின் ஒன்று திரண்ட போராட்டமும் கலைஇலக்கியவாதிகளின் இடைவிடாத ஆதரவும் ஒன்று சேர்ந்திருக்கிறது.
ருஷ்யப் புரட்சி குறித்து நிறைய வரலாற்று ஆவணங்கள், வீரமிக்க சம்பவங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஷோலகோவின் "டான் நதி அமைதி யாக ஓடிக் கொண்டிருக்கிறது" என்ற நாவல் புரட்சி காலகட்ட ரஷ்யாவை மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கிறது. நவம்பர் புரட்சியைப் பற்றிய ஐசன் ஸ்டீனின் அக்டோபர் அல்லது உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப் படம் ஒரு அரிய ஆவணக்களஞ்சியம். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்துப் போய்விடுகிறது.
ருஷ்யப் புரட்சியை நினைவு கொள்ளும்போது  அதை ஒரு மகத்தான வரலாற்றுச் சம்பவம் என்று மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம், வரலாறு நமக்கு எதை நினைவு படுத்துகிறது, எதை நாம் முன்னிறுத்திப் போராடவும் முன்செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.
கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, இனி பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் அரசு ஒருபோதும் உருவாகாது என்ற பொய்ப்பிரச்சாரத்தை உலகின் முக்கிய ஊடகங்கள் அத்தனையும் கடந்த பல வருசங்களாகத் தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது நிஜமில்லை என்பதையே கிரீஸ், பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து என்று ஐரோப்பாக் கண்டத் தின் சகல போராட்டங்களும் நிரூபணம் செய்தபடியே இருக்கின்றன.
ஊடகச் செய்திகளால் அவற்றை மறைக்க முடியவில்லை. ஐரோப்பாவில், அரபு நாடுகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மக்கள் எழுச்சி எதை அடையாளம் காட்டுகிறது. புரட்சி ஒரு போதும் தோற்றுப்போவதில்லை என்பதைத்தானே காட்டிக் கொண்டிருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடும் மக்கள், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதற்குச் சான்றாக ருஷ்ய புரட்சியையே நினைவு கொள்கிறார்கள். அதுதான் நவம்பர் புரட்சியின் உண்மையான வெற்றி.
ருஷ்யப் புரட்சி வரலாற்றில்  பல முன்மாதிரிகளை உருவாக்கியது. அந்த மாற்றம் மானுடவிடுதலையின் ஆதார அம்சங்கள் தொடர்பானது. நாகரீகம் அடையத் துவங்கிய நாளில் இருந்தே மனிதர்கள் சம உரிமையுடன் வாழும் கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண் டிருந்தார்கள். ஆனால் அதை எந்தச் சமூக அமைப்பும் அவர்களுக்குத் தர முன்வரவில்லை. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த பிரபுக்களின் ஆட்சியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்கே முதல் உரிமை தந்தது.
வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மதவாத இனவாத ஒடுக்குமுறைகளும் எளிய மனிதர்களை வாட்டி வதைத்தன. அந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, மக்களுக்கான அரசை உருவாக்கியதோடு பொதுவுடைமை என்ற சித்தாந் தத்தை வாழ்வியல் நெறியாக உருமாற்றியது. ரஷ்ய புரட்சியின் காரணமாக ருஷ்யாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட் டன. தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. ஜாரின் பிடியில் இருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷ்யா சுதந்திர நாடாக, முழுமையான சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த முன்முயற்சிகள் உலகின் பலதேசங்களுக்கும் வழிகாட்டுவதாக இருந்தன. நவம்பர் புரட்சியைப் போல ஒன்று தங்களது நாட்டிலும் உருவாகி விடாதா என்ற ஏக்கம் உலகெங்கும் தோன்றவே செய்தது. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானமேதைகள் இதை வெளிப்படையாகவே ஆதரித்து, அறிவியல் பூர்வமான சமூகமாற்றம்  என்று கொண்டாடினார்கள்.
நவம்பர் புரட்சியால் உருவான முக்கிய பாடம் உலகின் சகல அதிகார அடக்குமுறைகளையும் மக்கள் நினைத்தால் தூக்கி எறிந்து மாற்றிவிட முடியும் என்பதே. அதனால்தான் ருஷ் யப்புரட்சி மகாகவி பாரதிக்கு உத்வேகமான யுகப்புரட்சியாகியிருக்கிறது. மாய கோவ்ஸ்கியை நம் காலத்தின் மகத்தான கனவு நிறைவேற்றப்பட்டது என்று கொண்டாடச் செய்திருக்கிறது.
மனித சமூகத்தின் சகல கேடுகளுக்கும் உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அராஜகமே. அது வளர்ந்து வரும் நாடு களைப் பரிசோதனை எலிகளைப் போலாக்கி, தனது சொந்த லாபங்களுக்குப் பலிகொடுத்து வருகிறது. அன்றாட வீட்டு உபயோகப்பொருளில் துவங்கி ஆயுதவிற்பனை வரை சகலமும் பொருளாதார அராஜகத்தின் கைகளில் தானிருக்கிறது. ஆனால், பொது வுடைமை சித்தாந்தத்தைத் தனது வழி காட்டுதலாக எடுத்துக் கொண்ட நாடுகள் இதிலிருந்து மாறுபட்டு, மக்களின் உண்மையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளையே மேற்கொள்கின்றன.
உதாரணத்திற்கு, வெனிசுலா, லத் தீன் அமெரிக்க நாடுகளின் தலைவாசல் போலுள்ள சிறிய நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கிறது. அதாவது, இங்கிருந்து நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அதை நேரடியாகக் கொண்டு செல்ல மிகநீண்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. அவற்றின் வழியே ஆதாயம் அடைபவை அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். நாட்டின் அறுபது சதவீத மக்கள் வறுமையாலும் நெருக்கடியா லும் வாடினார்கள்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மய மாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடினர். தேர்தல் வந்தது, உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவேஸை வெற்றி பெறச் செய்தனர்.
சாவேஸ், அதிபர் பதவிக்கு வந்ததும். எண்ணெய் வருவாயை விழுங்கிக் கொழுத்து வந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். உடனே அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சாவேஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. இது சாவேஸ் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த  வெற்றி மட்டுமல்ல,  பன்னாட்டு வணிக மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
வெனிசுலாவின் புதிய அரசு பல வழிகளில் உலகிற்கு வழிகாட்டுகிறது. அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது.  குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உரிமையிலிருந்த பயிரிடப்படாத நிலங் களை ஏழை விவசாயிகளுக்கு சாவேஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக உள்ளது கம்யூனிச அரசான கியூபாவின் ஆட்சி முறை.
அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கியூபாவில் 155 பேருக்கு ஒரு டாக்டர், அதாவது 50 வீடுகளுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதோடு இறப்பு சதவீதமும் வெகு வாகக் குறைந்திருக்கிறது. அங்கே மருத்துவர்கள் நோயாளிகளின் வீடு தேடிவந்து சிகிச்சை செய்வதோடு மரபு மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒன்றாகவே மேற்கொள்கிறார்கள்.
இன்னும் கூடுதலாகச் சொல்வதாயின், கியூபாவில் மருத்துவக்கல்வி முற்றிலும் இலவசம். அமெரிக்காவில் ஒரு மாணவன் மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பணம் குறைந்த பட்சம் 70 லட்ச ரூபாய். அதே மருத்துவம் கியூபாவில்  இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. நோய்மையுற்ற மனிதனை நலமடையச் செய்யும் உயரிய சேவை. ஆகவே மருத்துவம் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது தான் சோசலிசம் கண்ட கனவு.
உலகமயமாக வேண்டியது ஆயுதங்களும் அணுகுண்டுகளும் வெறுப்பும் வன்முறையுமில்லை, அனைவருக்குமான கல்வி, அடிப்படை சுகாதாரம், சமாதானம், பெண்களுக்கான சம உரிமை இவையே உடனடியாக உலக மயமாக்கப்பட வேண்டியவை என்கிறது கியூபா. இந்த கருத்தாக்கங்கள் யாவுமே ருஷ்யபுரட்சியில் இருந்துதான் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது.
முன்னெப்போதையும் விட இன்று பொதுவுடைமைச் சித்தாந்தம் அதிகம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருவதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.
கியூபா தேசத்தின் நல்லெண்ணத் தூதுவராக பணியாற்றியவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்  அவர் இடதுசாரிகளை நேசிப்பதுடன் மக்கள் அரசிற்கான உறுதுணை செய்பவராக இருக்கிறார். அவரது வட்டசுழல் பாதையில் ஜெனரல் என்ற நாவல் வெளியான இரண்டாம் நாள் தனது அத்தனை அரசுப்பணிகளுக்கும் ஊடாக அதிபர் பிடல் காஸ்ட்ரோ அந்த நாவலைப் படித்து முடித்து உடனே ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதினார். கட்சிப்பணிகள், அரசுப்பணிகள் அத்தனைக்கும் இடையில் கலைஇலக்கிய ஈடுபாட்டினை தக்க வைத்திருப்பதே காஸ்ட்ரோவின் வெற்றிக்கான முக்கிய ரகசியம்.
இது போன்ற விருப்பம் லெனினுக்கும் இருந்தது. அவர் தனது போராட்டக் காலத்திலும் தலைமறைவு நாட்களிலும் உன்னதமான இசையையும் டால்ஸ்டாய், கோகல்,  கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதோடு அந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடவும் செய்தார்.
இலக்கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறியச் செய்திருக்கிறது.  அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிப்பதும் விடாப்பிடியாக கலை இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதுமே சரியான பொதுவுடைமைவாதிக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.
நவீன தமிழ் இலக்கியத்தை உரு வாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஸ்டெப்பி யும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைக் கூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன.
அன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்கள் உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அது துயருற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும். ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார். உண்மை தான் அது. பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.
ருஷ்ய படைப்பிலக்கியங்களை மறு வாசிப்பு செய்தலும், உரிய கவனப் படுத்துதலும், ருஷ்ய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைகளான ஜசன்ஸ்டீன், வெர்தோ,  டவ்சென்கோ, போன் றவர்களின் திரையாக்கங்களை ஊரெங்கும் திரையிட்டு வரலாற்றை நினைவுபடுத்துவதும்  இன்று இடது சாரிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கலைஇலக்கியச் செயல்பாடாகும்.
மார்க்சின் காலத்தில் இருந்த தொழிலாளர்களுக்கும் இன்றுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று பல் வேறு இனம், மதம், சாதி, சார்ந்த வேறுபாடுகளுடன்    சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்டவர்களாக நவீன உழைக்கும் வர்க்கம் உள்ளது. அதிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் காலகட்ட மிது. ஆகவே அவர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் வழியே மக்கள் எழுச்சியை உருவாக்குவது அதிக சவாலும் போராட்டங்களும் நிரம்பியது.
பின்நவீனத்துவ சிந்தனையாளர் பியே போர்த்தியோ (pierre Bourdieu)  இன்றுள்ள உலக அரசியல் நெருக்கடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "நியாயமற்ற விதிகளை உருவாக்கி அதை நாமாக கைக்கொள்ள வைப்பதுடன், அதற்கு மறுப்பேயில்லாமல் ஒத்துப்போகச் செய்வதுமே  உலகமய மாக்கல் செய்யும் தந்திரம்'' என்கிறார்.
எந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும்  உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுவது மேலானது என்ற அடையாள அட்டையை ஏந்திய படியே எகிப்தில் மக்கள் திரள் திரளாக கூடி நின்று முழக்கமிட்டது எகிப்திய அரசை நோக்கி மட்டுமில்லை; உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக் கள் அனைவரையும் நோக்கித்தான். ஆகவே அந்தக் குரலுக்கு செவிசாய்க் கவும் அதன் உத்வேகத்தில் செயல்படவும் தயாராவதே ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாகும்.

-எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்

Popular Quotations

● Hey Ram. —Mahatma Gandhi

● Swarajya is my birth right. —Bal Gangadhar Tilak
● Aram Haram Hai. —Jawahar Lal Nehru
● “We have now to fight for peace with the same courage and deter-mination as we fought against aggression.” —Lal Bahadur Shastri
● “……the light that shone in this country was no ordinary light. For that light represented living truth.” —Jawahar Lal Nehru
● Jai Jawan Jai Kishan. —Lal Bahadur Shastri
● Jai Jawan, Jai Kisan, Jai Vigyan —Atal Behari Vajpayee
● Truth and non-violence are my God. —Mahatma Gandhi
● Jan Gan Man Adhinayak Jai Hey. —Rabindra Nath Tagore
● Dilli Chalo. —Subhash Chandra Bose
● And all the men and women merely players. —Shakespeare (As You Like It)
● Sweet are the uses of adversity, which like a toad, ugly and Venomous. Wears yet a precious jewel in his head. —Shakespeare (As You Like It)
● Better to reign in hell than to serve in heaven. —Milton
● Et Tu, Brute ! —Shakespeare (Julius Ceaser)
● Good Government is no substitute for self Government. —Morley
● Death is the end of life, ah why should life all labour be. —Alfred Tennyson
● Full many a gem of purest ray serene, the dark unfathomed caves of ocean bear. —Thomas Gray
● And fools, who came to scoff, Remained to pray. —Oliver Goldsmith
● “…Seditious fakir striding half-naked up the steps of the Viceroy’s palace there to negotiate and parley on equal terms with the representative of the King Emperor.” —Winston Churchill
● “Generations to come, it may be, will scarce believe that such a one as this (Mahatma Gandhi) ever in flesh and blood walked upon this earth.” —Einstein
● “Whom the Gods love die young.” —Byron (Don Juan)
● “Necessity is the mother of invention.” —Unknown Latin Proverb
● “For fools rush in where angels fear to tread.” —Pope
● “A single step for a man–a giant leap for mankind.” —Neil Armstrong
● “Thank God, I have done my duty.” —Admiral Nelson
● “I have nothing to offer but blood, toil, tears and Sweat.” —Winston Churchill
● “Man is by nature a political animal.” —Aristotle
● “To every action there is an equal and opposite reaction.” —Issaac Newton
● Eureke ! Eureka ! —Archimedes
● “Let a hundred flowers bloom and let a thousand schools of thought contend.” —Mao Tsetung
● “Frailty, thy name is woman.” —Shakespeare (Hamlet)
● “Our sweetest songs are those that tell of saddest thoughts.” —Shelley (To a Skylark)
● “To maintain a fault known is a double fault.” —John Jewel
● “Beauty is truth, truth beauty”—that is all. Ye know on earth, and all ye need to know.” —Keats
● “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.” —Bacon
● “Knowledge is power.” —Francis Bacon
● “There is no future in any job, the future lies in the man who holds the job.” —G.W. Crane
● “Until the day of his death, no man can be sure of his courage.” —Jean Anovilh
● “All animals are equal, but some animals are more equal than others.” —George Orwell
● “If it were not for hopes, the hearts would break.” —Thomas Fuller
● “Freedom is not worth having if it does not include the freedom to wake mistake.” —Mahatma Gandhi
● “Hate the sin, love the sinner.” —Mahatma Gandhi
● “Facts are facts and will not disappear on account of your likes.” —Jawaharlal Nehru
● “The only alternative to co-existence is codestruction.” —Jawaharlal Nehru
● “History is moving and it will tend toward hope, or tend toward tragedy.” —George W. Bush
● “All great things are simple, and many can be expressed in single words : freedom, justice, honour, duty, mercy, hope.” —Sir Winston Churchill
DOs and DON’Ts IN MOBILE PHONE ( Instruction by BSNL)

BHARAT SANCHAR NIGAM LIMITED
(A Government of India Enterprise)
DOs  and  DON’Ts  IN MOBILE PHONE
Don’ts

·  Please do not click photographs with your mobile phones without permission from the people or authorities concerned. You may be  invading the privacy and possibly indulging in an illegal act.
·  Do not send obscene / pornographic text / images using SMS.
·  Do not send obscene / pornographic text / images using MMS (Multimedia Messaging Service)
·  Do not receive from or reply to SMS / MMS  of strangers.
·  Do not transmit obscene/ pornographic material, as it is an offence under Information Technology Act –2000 which carries a punishment of 5 years of  imprisonment and 1 lakh rupees fine.
·  Do not make calls to the unknown phone / mobile numbers you get while chatting or which are exhibited on various profiles on the Internet. If you do, you may be causing harassment to the other person.
·  Do not keep your Blue Tooth  open at all times-you may receive obscene / pornographic text, images and viruses.
·  Do not give your mobile numbers while chatting on INTERNET to avoid “STALKING”.
·  DO not handover your mobile phone to unauthorised service centres, to avoid CLONING.
·  It has been reported in the press that some unscrupulous elements may contact your mobile saying that they are from government agencies or Service Providers and request you to press #90 or #09.  It is reported that doing so would transfer control of your SIM to the caller.  SO DO NOT PRESS #90 or #09 when asked by unidentified persons.
DOs
Note down your IMEI number.
Security pin code should be used to avoid misuse of your mobile phones.
MMSs / SMSs  received should be checked for their source before opening.
Delete all obscene / pornographic text, images, SMS /MMS from your mobile phones which you might have received or stored. Otherwise this may land you in trouble and unwanted embarrassment.
Anti-virus software should be loaded in the mobile phone.
Mobile phone keypad should be locked after every use.
Use your mobile phone only when necessary .

The Importance of Open Communication 
             Open communication is vital in every relationship. Having an open communication between parents and children is one of the best thing in life. Sharing feelings, thoughts and ideas binds them more, strengthens their love and widens understanding though they are apart. It is not too late yet if you are not used to it, you could start practicing good communication with your loved ones today. And, if you are consistent to it definitely everything will follow.
Parents plans and do everything that is best for their children. So, even if they do not ask their children to return the favor for all their cares, their children usually thinks what is best for their parents especially by the time that they are no longer staying with their parents and cannot immediately respond to their parents needs as much as they love to. Elderly care topics like finding the right nursing home or in-home health care and other relevant topics for elderly needs could easily be tackled to parents though they are still on their productive and active age if there is an open communication between parents and children.
Having a great relationship and good communication with your parents with the assurance of your care though you will be miles apart in the future and opening the elderly care topics with them as early as possible will open their minds and let them understand better of their future needs. They could even help you choose of the right facilities for their future needs like nursing homes that offers great nursing home services.

To find a nursing home or a great facility that they could feel at home with while all their needs are being catered is a great achievement not just to children but to the seniors as well. If your parents sense that you care and love them and your plans is for their best, for them to live a healthy, happy and longer lives, these will act as their motivators to be on state that you want them to be and, will love and understand you more. Open communication between children and parents especially when parents are on their senior years is much more needed than any other stages in life, hope everyone will understand its importance.

Courtesy : http://satish24k.blogspot.com/
Visit: http://sapost.blogspot.com/ for latest Updates, Technology News
How to get Aadhaar?
Posted: 20 Oct 2011 12:03 PM PDT
Registration/ Enrollment of Aadhaar Number/ UID Card


The Aadhaar Application Form Can be downloaded and viewed online at
 www.iaadhaar.com/enrollment-form

Residents of India need to visit the nearest Enrollment Camp and need to fulfill some formalities (given below) in order to register for an Aadhaar.
Documents Verification.
Biometric Scanning of Ten Fingerprints.
Biometric Scanning of Iris.
Photograph.
Here are some of the stages of enrollment:

Enrolment Agency Operator
Resident Provides Verification Document
Enroler Enters Resident Data
Resident Validating Data Entry
Capture of Face Photograph
Iris Capture
Fingerprints Capture (Left Hand)
Fingerprints Capture (Right Hand)
Both Thumbprint Capture
Enroler Signing off with his own finger print
Resident Receives Acknowledgment
After these stages, residents will get an Aadhaar number within 20 to 30 days.
The following documents are required while applying for aadhaar UID card.
Proof of name and photo identity: (any one from list below)
Passport
PAN card
Ration/PDS photo card
Voter ID
Driving license
Government photo ID cards
NREGS job card
photo ID issued by recognised educational institute
Arms license
photo bank ATM card
photo credit card
pensioner photo card
freedom fighter photo card
kisan photo passbook
CGHS/ECHS photo card
Address card having name photo issued bu department of post.
Proof of address: (any one from list below):
Passport
Bank Statement
Passbook
Post Office
Account Statement/Passbook
Ration Card
Voter ID /Driving License
Government Photo ID cards
Electricity Bill (not older than 3 months)
Water bill (not older than 3 months)
Telephone Landline Bill (not older than 3 months)
Property Tax Receipt (not older than 3 months)
Credit Card Statement (not older than 3 months)
Insurance Policy
Signed Letter having Photo from Bank on letterhead
Signed Letter having Photo issued by registered Company on letterhead
Signed Letter having Photo issued by Recognized Educational Instruction on letterhead
NREGS Job Card
Arms License
Pensioner Card
Freedom Fighter Card
Kissan Passbook
CGHS / ECHS Card
Certificate of Address having photo issued by MP or MLA or Group A Gazetted Officer on letterhead
Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)
Income Tax Assessment Order
Vehicle Registration Certificate
Registered Sale / Lease / Rent Agreement
Address Card having Photo issued by Department of Posts
Caste and Domicile Certificate having Photo issued by State Govt.
Proof of DoB (optional) : (any one from list below)
Birth Certificate
SSLC Book/Certificate
Passport
Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on letterhead


Advantages after getting an Aadhaar Number / UID

The Aadhaar will become the single source of identity verification. Once residents enrol, they can use the number multiple times – they would be spared the hassle of repeatedly providing supporting identity documents each time they wish to access services such as obtaining a bank account, passport, driving license,andso on.
By providing a clear proof of identity, the Aadhaar will also facilitate entry for poor and underprivileged residents into the formal banking system, and the opportunity to avail services provided by the government and the private sector. The Aadhaar will also give migrants mobility of identity.
It will also provide governments with accurate data on residents, enable direct benefit programs, and allow government departments to coordinate investments and share information.
Source : http://www.iaadhaar.com/
Visit: http://sapost.blogspot.com/ for latest Updates, Technology News

Android OS driven Tablet

aakash ubislate tablet, cheapest tablet netbook in the worldThe Release of Android OS driven Tablet for Rs.1700 (US$ 35) was among the top of widely spread media news this week.
This tablet net book is to be sold in India in the name "AAkash Ubislate". A Canadian based Company known Datawind Ltd., is the manufacturer. This company is run by two Indians; Suneet and Raja Tulli. This company is already a leading developer of wireless web access products and services.
Recently HRD minister Kapil Sibal released this tablet. It is announced by Government that it is going to provide subsidy for supply of this tablet to students. As a result for student this will cost around Rs.1700. The Govt. of India even distributed 500 free tablets to students from different parts of India who had come to attend the event.
It is announced by Datawind that retail price of this tablet will be around Rs.3000. At this price, AAkash Ubislate will be cheapest tablet ever released.

Features:

  • The tablet meant for retail sales which is to be sole at Rs.3000/- will have an inbuilt cellular modem and SIM to access internet. So, this device is mobile GPRS internet connection enabled. This feature will not be available in the subsidized devices which are to be distributed at the cost of Rs.1700.
  • The subsidized version will have only WiFi connectivity provision. This means we require a WiFi modem externally to connect to the internet.
  • Both versions of the tablet are equipped with a 7-inch touch screen and will run on Google's Android platform, with WiFi connectivity for internet access and cloud storage.
  • The tablets will have 256 MB of RAM and two USB ports. It has no hard disc. However, a slot for inserting 32 GB MicroSD card (expandable memory) is available.
  • So, the device at a retail price of Rs.3000/- has both GPRS and Wi-Fi connectivity and available with an affordable Internet plan of Rs.98 per 2GB. This version can also be used as a phone by inserting a SIM card and headphones.
  • Both of these devices will be able to download over 1,50,000 Android applications including Office Suite and can play HD quality video.


ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டமாக்க எதிர்ப்பு ரயில்வே தொழிலாளர் வழக்கை ஏற்று தீர்ப்பாயம் முக்கிய இடைக்கால ஆணை

             தொழிலாளர் ஓய்வூதிய நிதியை தனியார் நிறுவனங் களின் பங்குச் சந்தை சூதாட் டப் பணமாக மாற்றும் புதிய ஓய்வூதிய சட்டத்தை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் சார் பில் தொடுக்கப்பட்ட வழக்கை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படும் என்று தீர்ப்பாயம் அறி வித்துள்ளது. இடைக்காலத் தீர்ப்பாக, பணிக்காலத்தில் உயி ரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஊனமுற்று வேலையிழப்போருக்கும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட ஆதாயங்களை ரயில்வே நிர்வா கம் வழங்கியாக வேண்டும் என்றும் தீர்ப்பாயம் ஆணை யிட்டுள்ளது.

           கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அவசர அவசர மாக புதிய ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்றியது தெரிந்ததே. அதன்படி, தொழிலாளர் ஊதி யத்திலிருந்து மாதந்தோறும் 10 விழுக்காடு பணம் பிடித்துக் கொள்ளப்படும். அரசுத் தரப்பி லிருந்து அதற்கு இணையான தொகை செலுத்தப்பட்டு, மொத் தத் தொகையும் ஓய்வூதிய நிதி மேலாளர்கள் எனப்படும் தனி யார் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்படும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. அந்த தனி யார் நிறுவனத்தினர் இவ்வாறு லட்சக்கணக்கான தொழிலாளி களிடமிருந்து திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தொழிலாளிக்கு அவர் ஓய்வு பெறும்போது நிதி வழங்கப் படும். அப்போது அரசியல், பொருளாதார வீழ்ச்சி, இயற் கைப் பேரிடர் போன்ற காரணங் களால் பங்குச் சந்தை சரிவ டைந்திருக்குமானால், தொழி லாளிக்கு மிக அற்பமாகவே பணம் கிடைக்கும், அல்லது இழப்பு என்று கூறி பணமே கிடைக்காமலே போகலாம்.
                அப்படியே ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் அதில் 60 விழுக்காடு மட்டுமே தரப் படும். மீதி 40 விழுக்காடு தொகை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் வைப்பு நிதியாக ஒப்படைக்கப்படும். அந்த காப்பீட்டு நிறுவனங் களும் இந்த நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டு, அதன் ஏற்ற இறக்கங் களுக்கு ஏற்பவே திருப்பித் தரும். இதனால், ஒரு தொழி லாளி மரணமடைய நேரிட் டால் அவரது ஓய்வூதிய முத லீட்டையே குடும்பத்தினர் இழக்கும் அபாயம் உள்ளது.

                  மத்திய அமைச்சரவை யின் ஆணைகள் மூலமாகத் திருத்தப்பட்ட விதிகளுடன் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2004 ஜன வரி 1 முதல் பணிக்கு வந்தோ ருக்கு இந்த ஆணைகள் அமலாக்கப்படும் என்றும் இவர்களுக்கு முந்தைய சட்டத் தின் ஆதாயங்கள் எதுவும் கிடைக்காது என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது. இவர்களில் பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை, ஊனமுற்று வேலையிழப்போருக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய ஆதாயங் களும் இல்லை என ரயில்வே நிர்வாகம் ஆணை பிறப்பித்துள் ளது.

                        ரயில்வேயில் புதிய ஓய்வூ திய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், உயிரிழக் கிற மற்றும் ஊனமடைகிற தொழிலாளிகளுக்கான விதி களை எதிர்த்தும் தட்சிண் ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் (டிஆர்இயு-சிஐடியு), ஐசிஎப்- யுனைட்டட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) ஆகிய இரு சங் கங்களின் சார்பில் சென்னை யில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப் பாயத்தில் இம்மாதம் 20ம்தேதி அன்று தனித்தனி வழக்குகள் (ஓஏ/575/2011, ஓஏ/576/2011) தொடுக்கப்பட்டன. இரு சங்கங் களின் சார்பில் வழக்கறிஞர் ஆர். வைகை இந்த வழக்கு களைத் தாக்கல் செய்தார்.

                  நீதிபதிகள் கே. இளங்கோ, ஆர். சதாபதி ஆகியோர் கொண்ட குழு இந்த வழக்குகளை ஏப் ரல் 21 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

                        குடியரசுத் தலைவர் ஓப்பு தலுடன் ஆணைகள் வெளி யிடப்படவில்லை என்பது வழக்கு விசாரணயில் சுட்டிக் காட்டப்பட்டது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு பிறப்பித்த சட்டத்தில் நிர்வாக ஆணைகள் மூலம் திருத்தங் கள் செய்திருப்பது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரான செயல் என்று வாதிடப்பட்டது.



                        செவ்வாயன்று (ஏப்.26) முதல்கட்ட இடைக்காலத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் குழு, 2004 ஜனவரி 1க்கு முதல் நியமிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளிகள் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை ஆகியவற்றை வழங்க ஆணையிட்டனர். ஊன முற்று வேலையிழக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்கவும் ஆணையிட்டனர்.

                          புதிய ஓய்வூதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரும் மனுக்கள் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதி பதிகள் அறிவித்தனர்

A POSTMAN'S KNOCK – LITERALLY

 
                
COMMENT ON THE BOOK PUBLISHED BY DR.KK. RAMACHANDIRAN N, PMG, MAIL MANAGEMENT, CHENNAI

            It was some weeks ago (Madras Miscellany, January 10th that I had referred to a book that was due to be published, Indian Postal History – Focus on Tamil Nadu. I was at the release of Dr. K. RamachandiranN's Ph.D these's-made-into-a-colourful-history the other day and heard him relate several fascinating bits of Madras-specific postal history and caught up with more in his book.

            Something new I learnt was about dak bungalows, though the explanation should have been obvious. I had always thought that they were Travellers' Bungalows run by the Public Works Department. But apparently in the late 18th Century the PWD had been put under the charge of the Postal Department and, with that arrangement, the Travellers' Bungalows too came under the Postal Department. With the mail carts also accepting officials as passengers, that service too was linked with the Travellers' Bungalows and they became dakbungalows. The Dak Bearer service, as it was called, accepted private passengers too, if there was space for them after the requirements for officers had been met. This service also offered palanquins and dholis for travellers.

            The first Railway Mail Service (RMS) came into operation in the Madras Circle, virtually the whole of South India, on September 29, 1871. The route it catered to was Madras-Cuddapah-Raichur. This route also pioneered the Travelling Post Office in the Madras Circle from April 6, 1874.

            The first telegraph office in Madras was, I learnt, opened in 1863. Not long afterwards, in 1866, the telegraph line from Madras to Colombo across the Palk Strait was laid from Rameswaram to Talaimannar. Apparently there was a connection to Peneng too, presumably through Colombo. Then Dr. Ramachandiran N lays pointed emphasis that this boon to the business community was "particularly" beneficial to "the Nattukkottai Chettiars…. actively involved in trading with the two neighbouring countries."

            Letter boxes away from post offices were introduced in the major cities of India from October 1854. That was the year the postal system introduced postmen to provide home deliveries. In February 1959, the Madras Circle had the distinction of recruiting the first postwoman in India. K.Padmakshi Amma was appointed to the Thiruvanathapuram Postal Division.

            Despite this column welcoming the postman's knock, it would appear to be out of touch with all the different services the Postal Department offers. I had heard of the Postal Savings Bank, but the Postal Life Insurance Scheme was a new one on me. Apparently the success of the banking scheme introduced on April 1, 1882 led to the insurance scheme being launched on February 1, 1884, originally for postal employees alone, but gradually being extended to government and quasi-government service employees as a whole. Giving an idea of how big this business is, is the record of R. Venkadesan, Development Officer, PLI, in the Tamil Nadu Circle. For 12 years in succession he has been the country's leading generator of PLI business. In 1997-98, he began his gold-medal-winning streak with Rs.13 crore business and, increasing that figure every year, he recorded Rs.51 crore in 2008-9 and was heading for nearly Rs.100 crore the next year at the time the book was being written.

            Snippets include the fact that PIN code 172114 is in Sikkim and is the highest post office in the world, at 15,500 feet, that the first postage stamp on a Tamil Nadu subject was issued on August 15, 1949, and featured a Nataraja bronze, the first Tamil Nadu Centenary to be honoured was that of the University of Madras on December 31, 1957, and that the first Tamil personages to be honoured were the legendary Tiruvalluvar on February 15, 1960 and the more recent Subramania Bharati on September 11, 1960.

            And did you know that C.V.Raman, Akilan the author, R.S. Manohar and Vivek the actors, K.Balachander the film director, and Dr.V. Gopalakrishnan, the toponymist and linguist, had all served in the Postal Department at some time in their lives?

            All this information and more that, reading between the lines, I sense is available warrant a much more comprehensive history of the Postal Department, the present edition just whetting the appetite.

Source: The Hindu 8.5.2011.

A POSTMAN'S KNOCK – LITERALLY

நெருக்கடிகளூடே பீடுநடைபோடும் உழைக்கும் வர்க்க ‘தீக்கதிர்’

                     தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக திகழ்ந்து வரும் தீக்கதிர் 48 ஆண்டுகால வரலாற்றினை கொண்டுள் ளது. மதுரை பதிப்பாகவும், பின்னர் 30 ஆண்டு கள் கழித்து சென்னையில் ஒரு பதிப்பும், அதன் பின்னர் கோவை, திருச்சி என நான்கு பதிப்புகள் வெளிவருவது பெருமிதம் தரக் கூடிய விஷயமாகும்.

                     ஒரு தொழிலாளி வர்க்க கட்சி தினசரி பத்திரிகை நடத்துவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இன்று தமிழ்நாட்டில் முதலா ளித்துவ கட்சிகள் கூட தினசரி பத்திரிகை நடத்துவதில் எத்தகைய சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. தீக்கதிரும் அத்தகைய சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித் துக் கொண்டே முன்னேறி வருகிறது.

                சோவியத் ரஷ்யாவில் புரட்சி கண்டு ஆட்சி அமைத்த லெனின் நாடு விட்டு நாடு கடத்தப்பட்ட போதிலும் அங்கெல்லாம் தலை மறைவாக இருந்து கொண்டே பத்திரிகை நடத்தி வந்ததை வரலாற்றில் விரிவாக படித்து அறிந்துள்ளோம்.

               ஒரு புரட்சிகர கட்சிக்கு முக்கியத் தேவை புரட்சிகர கட்சி அமைப்பு மட்டுமல்ல, அந்த அமைப்பை தொடர்ச்சியாக வழிநடத்துவதற் கும், அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக ஆயுத பாணியாக்குவதற்கும் பத்திரிகை மிக மிக அவசியம் என்பதை உணர்ந்தே லெனின், பத்திரிகை நடத்துவதில் தனது முழு கவனத் தையும் செலுத்தினார் என்பதை வரலாறு உணர்த்துகிறது.

                   பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூ னிஸ்ட் கட்சிகள் பத்திரிகை மற்றும் பிரசுரங் கள் அச்சடித்து விநியோகிப்பதில் இன்றும் தங்கள் பிரதான அரசியல் பணியாக செய்து வருகின்றன.

                  ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளே டான அஹஹாதா தற்போது 30 லட்சம் பிரதி கள் அச்சிட்டு விநியோகித்து வருகிறது என் பது பிரம்மிப்பூட்டும் செய்தியல்லவா?

ஏகாதிபத்திய உலகமும், பெருமுதலாளித் துவ நாடுகளும் கம்யூனிஸத்திற்கு எதிரான திட்டமிட்ட விஷமத்தன தாக்குதலை நடத்தி அதில் சில தற்காலிக வெற்றிகளை பெற் றுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் - ஏகாதிபத்திய சதிகளையும் அம்பலப்படுத்தவும், உள்நாட்டு ஆதிக்கத் சக்திகளையும், முதலாளித்துவ அரசுகளின் மக்கள் விரோத கொள்கை களையும் தோலுரித்துக் காட்டவும், தொழி லாளி வர்க்க நலனை பாதுகாத்து அந்நாட் டில் ஒரு புரட்சிகர மாறுதலை கொண்டு வர வும் பத்திரிகைகளின் முக்கிய பாத்திரத்தை உணர்ந்தே அவற்றை நடத்தி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தினசரி இதழ் களும், வார இதழ்களுமாக மொழி வாரியாக பல இதழ்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக மாநில அரசினை தலைமை தாங்கி நடத்தி வருகிறது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த அரசுக்கு எதிராக மாநிலத்தில் உள்ள அனைத்து முத லாளித்துவ பத்திரிகைகளும், ஏனைய ஊட கங்களும் பொய்யையும், புனை சுருட்டையும் வாரி இறைக்கின்றன. கட்சி அணிகளையும் மக்களையும் குழப்புகின்றன. ஆனால் கட்சி யின் நாளேடான ஜனசக்தி நாளிதழ் மட்டுமே கட்சி அணிகளுக்கும், மக்களுக்கும் உண் மையை எடுத்துரைக்கின்றன. முதலாளித் துவ பத்திரிகைகளின் அவதூறு சரியான பதிலடி தந்து வருகிறது. மாநில அரசின் கேடயமாக திகழ்ந்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஆயுதங்களை கடத் திக் கொண்டு வந்து வீசிய செயல் இந்திய மக்களிடம் பல்வேறு சந்தேகங்களையும் அன்று எழுப்பியது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி, மாநில அரசை கவிழ்த்திட நமது நாட்டிற்கு எதிரான சீர்குலைவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை அடிமையாக்க மத்திய அரசாங்கமே இந்த காரியத்தை செய்தது என்ற உண்மை வெளிவந்துள்ளது. இப்படியும் நடக்குமா என்று விவரம் அறிந்த அனை வரும் வேதனையோடு கேள்வி எழுப்புகின் றனர். ஆனால், மத்திய அரசோ வாய் மூடி மவுனம் காக்கிறது. ஒரு சில பத்திரிகைகள் தவிர வேறு எவையும் இதுபற்றி கண்டு கொள்ளவே இல்லை. இத்தகைய தேச விரோத மோசடி கும்பல்களின் போலி வேஷத்தை கலைத்திட நாம் ‘ஜன சக்தி’ யைத்தான் பயன்படுத்த முடியும்.

அதேபோல் கேரளாவிலும், திரிபுராவி லும் நமது கட்சி மற்றும் அரசுகளை பாது காப்பதால் நமது நாளிதழ்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

தமிழகத்தில் கட்சி அணிகளுக்கு அன் றாட அரசியல் குறித்தும் கட்சியின் நடை முறை கோட்பாடுகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறும் பணியில் தீக்கதிர் தனது கடமையினை நிறைவேற்றி வருகிறது.

கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்பு களின் கிளர்ச்சி, பிரச்சாரத்திற்கு உறுதுணை யாக இருந்து வருகிறது. கட்சி மற்றும் வெகு ஜன அமைப்புகளின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் பல்வேறு மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் கேளாக் காதினராக உள்ள ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரத்து கூறி வருகிறது.

கட்சி ஸ்தாபக பணியிலும் தனது பங் களிப்பை செலுத்துகிறது. ஆனால், தீக்கதிர் தான் செய்து வரும் பணியில் முழுமையாக வெற்றியடைந்துவிட்டதாக கூறவில்லை. இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்ற ஆதங்கம் பல்வேறு மட்டத்திலும் உள்ள கட்சி தோழர்களிடம், அணிகளிடம், வாசகர்களி டம் உள்ளது. இந்த எதிர்பார்ப்பு சரியானதே. ஆனால், தீக்கதிர் பதிப்புகளில் இன்றுள்ள குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிகளுக்கு மத்தியில், மிகக்குறைந்த மனித ஆற்றலுடன் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மார்தட்டி கூறமுடியும்.

தீக்கதிர் வரலாற்றில் அதன் விற்ப னையை உயர்த்துவது என்பது பெரும் சவா லாகவே உள்ளது. 1993ல் சென்னை பதிப்பு துவங்கிய பின் விற்பனையில் ஒரு விரிவாக் கம் ஏற்பட்டது. அடுத்து கோவை, திருச்சி பதிப்புகளுக்கு பின்னர் விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம் காண முடிந்தது. இருப்பினும் போதுமானதல்ல.

2005ல் நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், தமிழ் நாட்டில் உள்ள கட்சி உறுப்பினர் எண்ணிக் கைக்கும் தீக்கதிரின் விற்பனைக்கும் உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டி தீக்கதிரின் விற்பனையை உயர்த்த வேண்டியதன் அவசி யத்தை பளிச்சென்று விளக்கிக் கூறினார். கட்சித் தலைமையும், அமைப்புகளும் விற் பனையில் உள்ள இந்த குறைபாட்டினை போக்கிட உறுதி மொழி ஏற்றன.

இதன் விளைவாகவே அடுத்தடுத்து இதுகுறித்து திட்டமிட்டு தீக்கதிர் விற் பனையில் ஒரு தொடர்ச்சியான முன்னேற் றத்தைக் காண முயற்சித்தோம். இதில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நமது பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டிய இலக் கினை எய்திட மேலும் தீவிரமாக முயற்சித் திட வேண்டும். வரும் காலங்களில் விற் பனையில் உள்ள சவால்களை சந்தித்து மேலும் மேலும் முன்னேற்றம் காண்போம்.

தமிழகத்தை பொறுத்தவரை மாறி, மாறி ஆட்சிக்கு வரும் ஆளுங்கட்சிகள் அரசியல் உறவுக்கு ஏற்பவே தீக்கதிருக்கு விளம்பரம் தருகின்றன. உறவு என்றால் விளம்பரம், அர சுக்கு எதிரான நிலைப்பாடு என்றால் விளம் பரம் இல்லை என்று பாரபட்சமான போக் கினை கடைப்பிடிக்கின்றன.

ஆனால், வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய பாரபட்சமான போக்கு இல்லை. மேற்குவங்கத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக புழுதி வாரி இறைக்கும் பத்திரிகை களுக்கும் தவறாமல் விளம்பரம் தரப்படுகிறது. அதே போல் கேரளத்திலும் இடதுசாரி அரசு ஆளும் போது அதற்கு எதிராக விஷமத்தன மாக எழுதும் பத்திரிகைகளுக்கும் விளம்பரம் நிறுத்தப்படுவதில்லை. ஆந்திரா போன்ற பல மாநிலங்களிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவ தில் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டுமே அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் விளம்பரம் தரமறுப்பது என்ற நிலை உள்ளது.

தீக்கதிரை பொறுத்தவரை எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், சோதனைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்து முன்னே றும், இந்த வகையில் பல நெருக்கடிக்கு மத் தியிலும் சென்னை பதிப்பில் புதிய வண்ண அச்சு எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல வளர்ச்சிகளை கண்டிட திட்டமிடப் பட்டுள்ளது.

                       கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்களை முறியடித்து எவ்வாறு முன்னேறியதோ அதே போல் எதிர்வரும் காலங்களிலும் நெருப்பாற் றில் நீந்தி தொடர்ந்து பீடுநடை போடும் என்பதை உறுதிபடக் கூறுகிறோம்.