ஊகவர்த்தகமும், ஊழலும் இணைபிரியாதவை

ஊகவர்த்தகமும், ஊழலும்  இணைபிரியாதவை   மாநிலங்களவையில் Sitharam yechury in Rajya saba

விலைவாசியைக் குறைத் திட மத்திய அரசு, ஊக வணிகத் தைத் தடை செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திட வேண்டும், உணவுக் கிடங்குகளில் மிகுதியாக உள்ள உணவுதானியங்களை பொது விநியோக முறையில் விநியோ கித்திட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும் மாநிலங்களவை த் தலைவருமான சீத்தாராம் யெச் சூரி கூறினார்.

நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில், முன் னெப்போதும் இல்லாத அள விற்கு உணவு மற்றும் அத்தியா வசியப் பொருள்களின் விலை கள் கடுமையாக உயர்ந்திருப்ப தால், சாமானிய மக்களின் மீது அவற்றின் தாக்கம்’ என்ற பொருளில் குறுகிய கால விவா தம் நடைபெற்றது. அதில் பங் கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசி யதாவது: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங் கும்போது நிதியமைச் சர் பதினொரு பக்கஅறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில் அவர், ‘‘நம் மக்களின் வரு மானத்தில் சீரான வளர்ச்சி, மக்களின் தேவையை அதிகப் படுத்தியிருக்கின்றன. அதுதான் விலைவாசி உயர்வுக்குக் கார ணம்,’ என்று கூறியி ருந்தார். ஆனால், எதார்த்த நிலை என்ன? அரசாங்கம் வெளியிட் டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையே என்ன சொல் கிறது? ‘‘மக்கள் பொருட்களை வாங்குவதற்காக மேற் கொண் டிடும் செலவினம் என்பது 2005-06ஆம்ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, தற் போது 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சியடைந் திருக்கிறது.’’ இதுதான் அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாகும். மக்களின் உண் மையான வருமானம் அதிகரித் திருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். உலகமய ஆதர வாளர்கள் போற்றிப் புகழும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் என்ன கூறுகிறது? ‘‘நாட்டில் அதிகபட்சம் ஊதி யம் பெற்று வந்த 10 விழுக் காட்டினர், அடிமட்டத்தில் உள்ள 10விழுக்காட்டினரை விட 12 மடங்கு அதிகம் பெறு கிறார்கள். இது 60களில் இருந் ததைவிட 6 பங்கு அதிகம்.’’ இவ்வாறு ஒளிரும் இந்தியர் களுக்கும், அவதியுறும் இந்தி யர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்திருக் கிறது. இந்த இடைவெளியைக் குறைத்திட, சாமானிய மக்க ளின் அவல நிலையை ஓரளவா வது போக்கிட, விலைவாசி யைக் குறைத்திட வேண்டும். அதற்கு மூன்று முக்கிய நட வடிக்கைகளை அரசு எடுத் திடவேண்டும் என்றுதான் நாங் கள் கூறுகிறோம். கடந்த இரு ஆண்டுகளில் உணவுப் பொருட் கள் மீதான பணவீக்கம் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. தற்போது அது 12 விழுக்காட்டிற்கும் அதி கமாக இருக்கிறது. நாட்டில் வருமானம் அதிகரித்திருக் கிறதென்றால் அது உயர்மட் டத்தில் உள்ள ஒருசிலரின் கை களுக்குத்தான் சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் வரு மானம் உயரவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வினால் கடு மையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விலைவாசி உயர் வுக்கு முக்கியமான காரணி களில் ஒன்று ஊக வர்த்தகம். இலாபம் இல்லை என்றால் யாரும் ஊக வர்த்தகத்தில் முத லீடு செய்ய மாட்டார்கள். விலைவாசி உயரவில்லை என் றால், ஊக வர்த்தகத்தில் லாபம் ஈட்ட முடியாது. விலைவாசி உயரவில்லை என்றால் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய் துள்ளவர்கள் எவ்வித லாபத் தையும் ஈட்ட முடியாது. எனவே விலைவாசி உயர்வுக்கான நிர்ப் பந்தம் இயல்பாகவே ஊக வர்த் தகத்தில் ஈடுபட்டிருப்பவர்க ளிடமிருந்து வருகிறது. எனவே, விலைவாசியைக் குறைத்திட

முதல் கட்டமாக ஊக வர்த்தகத் தைத் தடை செய்ய வேண்டும். ஊக வர்த்தகமும் ஊழலும் இணைபிரியாதவை.ஊக வர்த் தகத்தை இயக்கிக் கொண்டி ருப்பதே கறுப்புப் பணம்தான்.

அடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு. தற்போது அரசாங்கம் பெட் ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்திருப்ப தாகக் கூறுகிறது. உலகச் சந் தையில் பெட்ரோலின் விலை உயர்வதால்தான் இங்கும் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்று அரசுத்தரப்பில் சொல் லப்படுகிறது. ஆனால் இது

உண்மையல்ல. நம் விலைகள், உலக விலைகளுடன் இணைக் கப்படவில்லை. நம் நாட்டில் உற்பத்தியுடன்தான்விலைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக, உணவு தானிய இருப்பு. இன்றைய தினம் மத் திய அரசின் கிடங்குகளில் 600 லட்சம் டன்களுக்கு மேல் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இது வழக்கமாக இருக்கும் இருப்பைக் காட்டிலும்

இரண்டரை பங்குக்கும் அதிக மாகும். எனவே, இவற்றைப் பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு அளித் திட முன்வரவேண்டும். இது வும் விலைவாசியைக் கட்டுப் படுத்திட உதவும்.இவ்வாறு, ஊக வர்த்தகத்தைத் தடை செய் தல், பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை மீண்டும் குறைத்தல், உபரியாக உள்ள உணவு தானியங்களை பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு வழங்குதல் ஆகிய மூன்றுமுக்கிய நடவடிக் கைகளின் மூலமாகவும் விலை வாசியைக் குறைத்திட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.