போராட்டம் தீவிரமாகும்! தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை


பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைக்க வேண்டும் போராட்டம் தீவிரமாகும்!

தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை
புதுதில்லி, பிப். 29- அகிலஇந்திய வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள்-ஊழியர்களுக்கு மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர். கோரிக்கைகளை ஏற் காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று தலைவர் கள் எச்சரித்துள்ளனர். மத்திய தொழிற்சங்கங் களின் தலைவர்கள் புத னன்று புதுதில்லியில் செய் தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-பிப்ரவரி 28 செவ்வா யன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள், ஊழியர்கள் அனைவ ருக்கும் மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக்கொள் கிறோம்.இதுவரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் செவ்வாயன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் மிகவும் பரவலான அளவில் நடை பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடை பெற்ற வேலைநிறுத்தம் இது.தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பு டைய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு, ஒப்பந்தத் தொழிலா ளர் முறைக்கு எதிர்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட் டன. இந்த கோரிக்கைகள் அரசியல் சார்புடையது அல்ல. மாறாக தொழிலாளர் களின் வாழ்வுரிமை தொடர் புடையது. அதனால்தான் தொழிலாளர்கள் பரந்து பட்ட அளவில் இந்த வேலைநிறுத்தத்தில் பங் கேற்றுள்ளனர்.தனியார்மயம் நாட்டு நலனுக்கு தீங்கு பயக்கும் என்பதாலேயே அதை எதிர்க்கிறோம். லாபம் ஈட் டக்கூடிய அரசு பொதுத் துறை நிறுவனப்பங்குகளை தனியாருக்கு விற்பதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. நாட் டின் சுயசார்போடு தொடர் புடைய பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியு றுத்தி இந்த வேலைநிறுத் தம் நடைபெற்றுள்ளது.தற்போது நடைமுறையி லுள்ள போனஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ளன. இந்த சட்டத்தின்படி அதிக பட்சமாக ரூ.8 ஆயிரத்து 400தான் போனஸ் பெற முடியும். பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்க ளில் கூட தொழிலாளர்க ளுக்கு சொற்பத்தொகை தான் போனசாக வழங்கப் படுகிறது. எனவேதான் போனஸ் உச்சவரம்பை நீக்கவேண்டும் என்று கோருகிறோம். கோரிக்கைகளின் நியா யத்தன்மை காரணமாகவே வேலைநிறுத்தம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இது அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.இந்தப்போராட்டத் தின் போது, தொழிலாளர் களின் சர்வீஸ் துண்டிக்கப் படும் என்றும், பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகள் மிரட்டின. ஆனால் அதையும் மீறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெருவாரியாக பங்கேற்றுள்ளனர். பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தொழிற்சங்கங் கள் ஒன்றுபட்ட இயக்கத் தின் மூலம் அதை எதிர்த் துப்போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். மாநில அரசுகளின் மிரட்டல் மட்டுமின்றி பல் வேறு இடங்களில் காவல் துறை மற்றும் குண்டர்கள் போராடிய தொழிலாளர் கள் மீது தாக் குதல் தொடுத் துள்ளனர். ஆயிரக்கணக்கா னோர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஹரியா னா, சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களில் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாயன்று இரவு 9 மணிக்கு வேதாந்தா நிறுவன தொழிலாளர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் மூன்று தொழிலாளர்கள் படுகாயம டைந்துள்ளனர். இத்தகைய அடக்குமுறை நடவடிக்கை களை தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கின் றன. நாடு தழுவிய கண்டன இயக்கங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்பு கிறோம்.தொழிலாளர்களின் போராட்ட உரிமையை ஒரு போதும் விட்டுத்தர இய லாது என தலைவர்கள் கூறினர். கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு பல மாதங் கள் கடந்த பின்னும், தொழிற்சங்கத் தலைவர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட் டங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் ஆகியவற் றின் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் அறிவிக் கப்பட்டது.இந்த கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் முன்வரவேண்டும். இதற் காக சில நாட்கள் காத்திருப் போம். நியாயமான தீர்வுக்கு அரசு முன்வராவிட்டால், போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என்று தலை வர்கள் கூறினர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர்கள் ஏ.கே. பத்மநாபன், தபன்சென் எம்.பி., பிஎம்எஸ் தலைவர் பி.என்.ராய், ஏஐடியுசி தலை வர் குருதாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் தலைவர் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.